Posts

மந்திர பாத்திரம்

 ஒரு பறவை தினமும் ஒரு முனிவரிடம் சென்று பழத்தை வைத்து விட்டு, பிறகு தண்ணீர் எடுத்துக்கொண்டு. தன் வீட்டிற்கு செல்லும். இது தினந்தோறும் நடக்கும். ஒருமுறை முனிவர் பறவையே நீ. எனக்கு தினந்தோறும் பழங்களை வைத்து விட்டுச் செல்கிறாயே எதற்காக? நீங்க கடவுளை நோக்கி தவம் செய்கிறீர்கள் உங்களுக்கு. பசி எடுக்கும் அல்லவா? அதனால் தான் பழங்களை வைத்து விட்டு செல்கிறேன். உன் பேச்சைக் கேட்டு என் மனம் குளிர்ந்தது. உனக்கு நான் இந்த பாத்திரத்தை தருகிறேன் இந்த பாத்திரம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கு. நன்றி முனிவரே. இதை வைத்து நான் என்ன செய்வது? இருக்கட்டும் பழங்களை இதில் வைப்போம். அது சரி நம்மிடம்தான். பழங்களே இல்லையே. பழங்கள் இருந்தால். எப்படி இருக்கும்? இது எப்படி பழங்கள் இங்கே வந்தது. ஒருவேளை இந்த பாத்திரத்தின் சக்தியோ. இப்போது பீட்ஸா வேண்டும். பீட்ஸா வந்துருச்சு. பெப்சி கோக் வேண்டும். யாரது? கண்மணி, கதவ திற. அய்யோ நண்பர்கள் வந்துட்டாங்களே அவங்க கிட்ட இத பத்தி சொல்லலாமா வேண்டாமா. வேண்டாம் வேண்டாம். என்ன பண்ற கண்மணி? வாங்க உள்ள போகலாம் . இல்ல வேண்டாம் நம்ம வெளிய போயி சுத்தலாம். வேண்டாம் வெளிய ஒரே வெயிலா இ...

முட்டை

  நாளைக்கு. இந்த முட்டையிலிருந்து ஒரு குட்டி குருவி வரப்போகுது. ஆமாம் கண்மணி. உனக்கு. ஆண் குருவி வேணுமா? பெண் குருவி வேணுமா? சொல்லு கண்மணி. எதுவா இருந்தாலும் எனக்கு ஓகேதான். அந்த குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம்? கண்ணாம பெயர் வைக்கலாமா? யாழினி அப்படின்னு பேரு வைக்கலாமா? நல்லா இருக்கு. சரி சரி எல்லாரும் அவங்க வீட்ல போய் தூங்குங்க. நம்ம எல்லாம் நாளைக்கு மீட் பண்ணலாம். குட் நைட். சீ யூ. அய்யோ. என் முட்டைய காணோமே. இது எப்படி? இது எப்படி சாத்தியம்? நம்ம நேத்து நைட் எல்லாரும் பார்த்தோமே. அதுக்குள்ள எப்படி தூக்கிட்டு போய் இருப்பாங்க. யாரும் பயப்படாதீங்க. என் ஃப்ரெண்ட. டோரா, புஜி. இருக்காங்க. அவங்க கிட்ட சொல்றேன். அவங்க நமக்கு உதவி பண்ணுவாங்க. ஹலோ. வணக்கம் டோரா புஜி டிடெக்டிவ் ஏஜென்ஸி. உங்களுக்கு என்ன உதவி தேவை? எங்க வீட்டுல இருக்க ஒரு முட்டைய யாரோ தூக்கிட்டாங்க. நீங்க உதவி பண்றீங்களா? நாங்க வரும் லோகேஷன் அனுப்பிவிடுங்க. டோரா நம்மளோட முதல் கேசி வந்துருக்கு. வா வா போலாம். வரேன் பூஜி. என்ன நடந்தது தெளிவா சொல்லுங்க. நாங்க நைட். இந்த முட்ட கூட இருந்து பேசிட்டு போனோம். காலையில பாத்தா முட்டைய காண...

டோராவின் பயணங்கள்.

  டோராவின் பயணங்கள். ஏய் டோரா அங்க பாரு. யார் நீங்க உங்களுக்கு என்ன வேணும்? என் பெயர் ஜேக். இது நம்ம ஊரு பேரு மாதிரி இல்லையே. இல்ல நான் நிலாவில் இருந்து வரேன். ஏன் எதுக்கு இங்க வந்திங்க. ஒரு வேல நம்பள போட்டுத் தள்ள வந்திருப்பாரோ? அதெல்லாம் இல்ல. ஒரு மோதிரத்தை வாங்கி என் காதலிக்கு அன்பளிப்பாக தரலாம்னு இருந்தேன். அந்த மோந்திரம். பூமியில விழுந்துடுச்சு. அதை தேடி கண்டுபிடிக்க தான் நான் இங்க வந்த. என் மோதிரத்தை கண்டுபிடிக்க நீங்க உதவிங்களா? அய்யோ பாவம். டோரா நம்ம ஜாக் க்கு உதவி பண்ணலாம். சரி பூஜி. உதவி பண்ணலாம். நீங்களும் ஜாக்க்கு உதவி பண்றீங்களா? சிறப்பு மிகச்சிறப்பு. இப்போ நம்ப வழிகாட்டிய கூப்பிடலாம். வழிகாட்டியே வெளிய வா. இன்னும் சத்தமா சொல்லுங்க. வழிகாட்டியே வெளியே வா. வணக்கம் நண்பர்களே. அப்பறம் லைக் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க. மறக்காம சப்ஸ்க்ரைப் பண்ணுங்க. இப்போ நம்ப ஜகோடா மோதிரத்தை கண்டுபிடிக்கலாமா? அதுக்கு மொதல்ல பாலத்தை தாண்டனும். இரண்டாவது நதியை கடக்கணும். மூன்றாவது எரிமலைக்கு போகணும். முதல்ல பாலம். இரண்டாவது நதி. மூன்றாவது எரிமலை. நண்பர்களே நீங்களும் சேர்ந்து சொல்லுங்க.முதல்...

மரம் வளர்ப்போம்.

Image
  ஒரு காட்டுல ஒரு காக்கா ஒரு பறவை இருந்தது. காக்கா ஒரு மரத்துலயும் பறவை ஒரு மரத்துலயும் வாழ்ந்து வந்தது. காக்கா மரத்துல நிறைய பழங்கள் காய்த்து இருந்தது. ஆனால் பறவை மரத்தின் எந்த பழங்களும் இல்லை. இதைப்பார்த்த. காக்கா. ஏய் பறவையே அந்த மரத்தில்தான் பழங்கள் வரவில்லையே. நீ எதற்கு? தண்ணீரை ஊற்றிக்கொண்டு இருக்கிறாய் என்று கேட்டது. இந்த மரம் பழங்களைத் தரும் என்று நான் தண்ணீரை ஊற்றவில்லை. அது வாழ வேண்டும் என்பதற்காக தண்ணீரை ஊற்றி கொண்டிருக்கிறேன். என்ன பறவை சொன்னது. இதைக்கேட்ட மரம். பறவையே நீ சொன்னதை கேட்டு என் மனம் குளிர்ந்தது. உனக்கு நான் இரண்டு வரங்களைத் தருகிறேன் என்ன வரம் வேண்டும் கேள். பறவை சற்றும் யோசிக்காமல். இந்த மரத்தில் நிறைய பழங்கள் காய்க்க வேண்டும். இரண்டாவது வரம். மரத்திற்கு தண்ணீர் விடுபவர்களுக்கு காய் இனிமையாக இருக்க வேண்டும். தண்ணீர் ஊற்றாதவர்களுக்கு கசப்பாக இருக்க வேண்டும்.  நீதி. மரம் வளர்ப்போம். தண்ணீர் ஊற்றுவோம். இனிப்பான காய்களை சுவைப்போம். நன்றி வணக்கம்.

சயின்டிஸ்ட்

Image
 சயின்டிஸ்ட் ஒருத்தர் கூண்டில் எலி வளர்த்தார். எலிக்கு பசி எடுத்தால் கூண்டுக்குள் உள்ள மணியை அழுத்தக் கற்றுக் கொடுத்திருந்தார். பசியெடுத்தால் எலி மணியை அடிக்கும். சயின்டிஸ்ட் உணவு கொண்டு வந்து தருவார். 'ஒரு எலியை இந்த அளவுக்குப் பழக்கி விட்டோமே' என்று அவருக்கு தலைகால் புரியாத பெருமை. இந்த நிலையில், சயின்டிஸ்ட் புதிதாக ஒரு எலியைப் பிடித்து வந்து கூண்டில் விட்டார்.எலிகளும்  பேசிக்கொண்டன. புதிய எலி கேட்டது, "இந்த ஆள் எப்படி?" அதற்கு பழைய எலி சொன்னது, "இவனா? ரொம்ப தத்தி, மணி அடிச்சதும் சாப்பாடு எடுத்துட்டு வர்ற மாதிரி இவன பழக்குறதுக்குள்ளே நான் பட்ட பாடு இருக்கே..அப்பப்பா! பய இப்பத்தான் ஒருவழியா தேறிட்டு வர்றான்.."

அன்பு என்றால் என்ன

Image
 அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை,  ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.  இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.  மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.  முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள். கேட்டபோது சொன்னாள்  நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்".   அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார். "அன்பு என்றால் இது தான்". நீதி: உங்களால் உலகிற்கு எதையேனும் இலவசமாகக் கொடுக்க முடியும் என்று நினைத்தால் அன்பைக் கொடுங்கள்... ஏனெனில் உலகம் அதற்குத்தான் அதிகமாக ஏங்கிக் கிடக்கின்றது

The Dog and His Shadow Moral Story in Tamil

  நாயும் அதன் நிழலும் முட்டாள் நாய் ஒன்று ஒரு இறைச்சிக் கடையில் இருந்த எலும்புத்துண்டை திருடியது. அதனை வாயில் கவ்விக்கொண்டு தன் இருப்பிடத்திற்குப் புறப்பட்டது. செல்லும் வழியில் சில நாய்குட்டிகள் அந்த முட்டாள் நாயிடம், எலும்புத்துண்டை தறுமாறு' கேட்டன. ஆனால் அந்த முட்டாள் நாயோ இதை நான் யாருக்கும் தரமாட்டேன். இதை முழுவதுமாக நான் மட்டுமே சாப்பிட போகிறேன்". என்று கூறி விட்டுச்சென்றது. செல்லும் வழியில் பாலத்தை வேண்டியிருந்தது நாய் பாலத்தைக் கடக்கும் போது கீழே தண்ணிரைப் பார்த்தது. அந்தத் தண்ணீரில் அதன் உருவம் தெரிந்தது. தண்ணீரில் தெரிந்த அதன் உருவத்திலும் வாயில் எலும்புத்துண்டு இருந்தது அதைக் கண்ட நாய் இந்த நாயிடமும் ஒரு எலும்புத்துண்டு உள்ளது. இதையும் அபகரித்துவிட வேண்டும்" என்று நினைத்தது. உடனே அது பலமாக லொள் லொள் எனக் குரைத்து கொண்டே தண்ணிரில் தெரிந்த நாயின் மீது பாய்ந்தது