நாயும் அதன் நிழலும்
முட்டாள் நாய் ஒன்று ஒரு இறைச்சிக் கடையில் இருந்த எலும்புத்துண்டை திருடியது. அதனை வாயில் கவ்விக்கொண்டு தன் இருப்பிடத்திற்குப் புறப்பட்டது.
செல்லும் வழியில் சில நாய்குட்டிகள் அந்த முட்டாள் நாயிடம், எலும்புத்துண்டை தறுமாறு' கேட்டன. ஆனால் அந்த முட்டாள் நாயோ இதை நான் யாருக்கும் தரமாட்டேன். இதை முழுவதுமாக நான் மட்டுமே சாப்பிட போகிறேன்". என்று கூறி விட்டுச்சென்றது.
செல்லும் வழியில் பாலத்தை வேண்டியிருந்தது நாய் பாலத்தைக் கடக்கும் போது கீழே தண்ணிரைப் பார்த்தது. அந்தத் தண்ணீரில் அதன் உருவம் தெரிந்தது. தண்ணீரில் தெரிந்த அதன் உருவத்திலும் வாயில் எலும்புத்துண்டு இருந்தது
அதைக் கண்ட நாய் இந்த நாயிடமும் ஒரு எலும்புத்துண்டு உள்ளது. இதையும் அபகரித்துவிட வேண்டும்" என்று நினைத்தது. உடனே அது பலமாக லொள் லொள் எனக் குரைத்து கொண்டே தண்ணிரில் தெரிந்த நாயின் மீது பாய்ந்தது