Posts

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 181 - 200

Image
IPC-181\nஎவரேனும் ஒரு சத்தியப் பிரமாணம் அல்லது உறுதிமொழியின்பால் சட்டப்படி கட்டுப்பட்டு, ஏதாவதொரு பொருளில், யாரேனும் ஒரு பொதுப் பணியாளரிடமோ அல்லது அத்தகைய சத்தியப் பிரமாணம் அல்லது உறுதிமொழியை செய்து வைக்க அதிகாரம் கொண்ட பிற நபரிடமோ உண்மையைக் கூற வேண்டியவர், அத்தகைய பொதுப்பணியாளரிடமோ அல்லது மேற்கூறப்பட்டவாறு உள்ள பிற நபரிடமோ, அப்பொருளின்மீது பொய்யானது என அவருக்குத் தெரிந்தே அல்லது நம்பியோ அல்லது அது உண்மையானது என்று நம்பாமலோ, ஏதாவதொரு பொய்யான வாக்குமூலத்தை அளித்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-182\nஒரு பொது ஊழியரிடம் நெஞ்சறிந்தே பொய்யை கூறுகிறோம். அதன் விளைவாக அந்த அதிகாரி தன்னுடைய கடமையை சரிவர செய்ய முடியாமல் தவறுதலாக நடக்க வேண்டி நேரிடும். தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி பிறருக்கு தொல்லை தர நேரிடலாம். ஆகவே அத்தகைய பொய் தகவல் கொடுத்தவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட அபராதம் அல்லது இரண்டும் தண்டனை...

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 161-180

Image
IPC-161\nபொது ஊழியருக்கு அரசு ஊதியம் கொடுக்கின்றது. ஒரு கடமையை மாற்றுவதற்காக அல்லது சலுகையை காட்டுவதற்காக அல்லது உதவி செய்வதற்காக அல்லது உபத்திரவம் தருவதற்காக அவர்கள் பிறரிடமிருந்து எத்தகைய ஊதியமும் அல்லது இலாபமும் லஞ்சமாக பெறக்கூடாது. அப்படி பெறுவது குற்றமாகும். பொது ஊழியர் என்ற சொல் மத்திய அரசில் பணிபுரிவோர், மாநில அரசில் பணிபுரிவோர், உள்ளாட்சித் துறையில் அல்லது அரசாங்க நிறுவனங்களில் பணி புரிவோர் ஆகிய அனைவரையும் குறிக்கும் (21 IPC பிரிவை பார்க்கவும்). பொது ஊழியராக பணிபுரியும் நிலையை எதிநோக்கி உள்ளவர்கள் மேலே குறிப்பிட்டபடி ஊதியம் பெறுவதும் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். Explanation: பொது ஊழியராக பணிபுரியும் நிலையினை எதிநோக்கி உள்ளவர் என்று இங்கே குறிப்பிடுவது வேலைக்கு செல்லும் வாய்ப்பினை உறுதியாக எதிர்நோக்கி உள்ளவர்களை மட்டும் குறிக்கும். அப்படி இல்லாமல் தான் ஒரு பொது ஊழியர் ஆகும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறி பிறரை ஏமாற்றி இத்தகைய ஊழியத்தை பெறுவோரை மோசடி செய்த குற்றத்திற்காக தான் தண்டிக்க முடி...

இந்திய தண்டனை சட்டம் பிரிவு-121-140

Image
IPC-121  எவரேனும் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுத்தால் அல்லது அத்தகைய போரைத் தொடுப்பதற்கு முயன்றால் அல்லது அத்தகையப் போரை தொடுப்பதற்கு தூண்டினால் மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். எடுத்துக்காட்டு A என்பவர் இந்திய அரசாங்கத்திற்கு எதிரான ஒரு புரட்சியில் சேர்கிறார்.இச்சட்டப்பிரிவில் பொருள் வரையறுக்கப்பட்ட குற்றத்தைப் புரிந்திருக்கிறார்.     IPC-122 எவரேனும் இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் உள்நோக்கத்துடன் அல்லது போர் தொடுப்பதற்குத் தயாராக இருந்து, ஆட்கள், ஆயுதங்கள் அல்லது படைக்கலன்களைச் சேகரித்தால் அல்லது மற்றபடியாக போர்த் தொடுப்பதற்குத் தயாரானால் ஆயுள் சிறைத்தண்டனை அல்லது பத்து வருடங்களுக்கு மிகாத ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-123 எவரேனும், ஏதாவதொரு ஒரு செயலினால் அல்லது ஏதாவதொரு சட்டவிரோதமான செய்வனச் செய்யாமையால், இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுப்பதற்கான ...

இந்திய தண்டனை சட்டம் பிரிவு-141-160

Image
IPC-141\n.1. மத்திய அரசை அல்லது மாநில அரசை வன்முறைச் செயல்களாலும் அச்சுறுத்தல்களாலும் தத்தம் கடமையினைச் செய்யவிடாமல் தடுப்பது; \n2. சட்ட பூர்வமாக நிலைநாட்டப்பட ஒழுங்கை அல்லது நடவடிக்கையை எதிர்ப்பது; \n3. அத்துமீறி நுழைத்தாள், சொத்துக்களை அழித்தல், வேறு குற்றங்களை செய்தல்; \n4. மற்றவர்களின் தனி உரிமைகளை வன்முறைச் செயல்களினாலோ அல்லது அச்சுறுத்தல் நடவடிக்கைகளினாலோ தடுப்பது, பழிப்பது மறுப்பது; \n5. வன்முறைச் செயல்களின் மூலம் செய்யக்கூடாத காரியத்தைச் செய்யும்படி பிறரைக் கட்டாயப்படுத்துவது; ஆகிய குற்றங்களை ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து செயல்படுத்தும் போது அந்தக் கூட்டத்தைச் சட்ட விரோதமான கூட்டம் என்று குறிப்பிடுகிறோம். \nசட்டவிரோதமான கும்பல் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் ஒரு கும்பல், அந்த கும்பலிலிருக்கிற நபர்களின் பொதுவான நோக்கம் பின்வருமாறு இருந்தால், ஒரு "சட்டவிரோதமான கும்பல் " என குறிப்பிடப்படும். முதலாவது:-மத்திய அல்லது ஏதாவதொரு மாநில அரசாங்கம் அல்லது பாராளுமன்றம் அல்லது ஏதாவதொரு மாநிலத்தின் சட்டமன்றத...

இந்திய தண்டனை சட்டம் பிரிவு-101 to 120

Image
 இந்திய தண்டனை சட்டம் பிரிவு-101 கடைசி முந்தைய சட்ட பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரிப்புகளில் ஏதாவதொன்றின் கீழ் இல்லாத குற்றமாக இருந்தால், தனிநபர் தற்காப்பு உரிமையானது தாக்குபவருக்குத் தன்னிச்சையாக மரணத்தை விளைவிப்பதற்கு நீட்டிக்காது.ஆனால் சட்டப்பிரிவு 99 இல் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின்கீழ் மரணத்தை தவிர, பிற ஏதாவதொரு தீங்கை தாக்குபவருக்குத் தன்னிச்சையாக விளைவிப்பதற்கு நீட்டிக்கிறது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு-102 நம்முடைய உடலுக்கு ஆபத்து ஏற்பட போகிறது என்ற அச்சம் எப்போது நமக்கு தோன்றுகிறதோ அந்த நேரத்திலிருந்து நம்மை தற்காத்து கொள்ளும் உரிமையும் நமக்கு கிடைக்கிறது. நம் உடலுக்கு தீங்கு செய்யக்கூடிய குற்றத்தை எதிரி புரியாவிட்டாலும் புரிவதற்கான முயற்சியை அல்லது மிரட்டலை அவன் மேற்கொண்டாலே போதும். நம்மை பாதுகாத்து கொள்ளும் நடவடிக்கையை நாம் உடனே மேற்கொள்ளலாம். உடலின் தனிநபர் தற்காப்பிற்கான உரிமையின் தொடக்கம் மற்றும் தொடர்ச்சி உடலின் தனிநபர் தற்காப்பிற்கான உரிமையானது, குற்றத்தைப் புரிவதற்கான ஒரு முயற்சி அல்லது அச்சுறுத்தலிலிருந்து உடலின் ஆபத்திற்கான நியாமான எதிர்பார்ப்பு அச்சம் ஏற்பட...