இந்திய தண்டனை சட்டம் பிரிவு 201 - 220

IPC-201\nஒரு குற்றம் நடைபெற்றதை அறிகிறோம் அல்லது அதனைப்பற்றி அறியும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. அந்த நிலையில் அந்தக் குற்றம் பற்றிய சாட்சியத்தை குற்றவாளியைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மறைப்பது குற்றமாகும். அந்த நோக்கத்துடன் நடைபெற்ற குற்றத்தை பற்றிய பொய்யான தகவலைத் தருவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். அப்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றம் நடைபெற்றிருந்தால், அப்படிச் செய்தவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைக்காவல் விதிக்கப்பட்ட குற்றம் நடைபெற்றிருந்தால் 3 ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். 10 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை பெறத்தக்க குற்றம் நடை பெற்றிருந்தால் அந்தக் குற்றத்திற்கு விதிக்கத்தக்க தண்டனையில் நான்கில் ஒரு பங்கைச் சிறைக்காவலாகவும் அல்லது அபாரதமாகவும் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். குற்றம் புரிந்தவரைத் தப்பிக்க வைக்க குற்றத்தின் சாட்சியத்தை காணாமல்போகச் செய்தல் அல்லது பொய்யான தகவலை அளித்தல் எவரேனும், ஒரு குற்றம் புரியப்பட்டிருக்கிறது என்று தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்குக் காரணமிருக்கும்போது, சட்டபூர்வ தணடனையிலிருந்து குற்றம் புரிந்தவரைத் தப்பிக்க வைப்பதற்காக, அக்குற்றம் புரியப்பட்டிருப்பதான ஏதாவதொரு சான்றாதாரத்தை உள்நோக்கத்துடன் காணாமல் போகச் செய்தால் அல்லது அந்த உள்நோக்கத்துடன் அக்குற்றம் பொருட்டான ஏதாவதொரு தகவலை, பொய்யானது என தெரிந்தோ அல்லது நம்பியோ அளித்தால்; ஒரு மரண தண்டனைக்குரிய குற்றமாக இருப்பின்:- குற்றம் புரியப்பட்டிருப்பதாக அவருக்குத் தெரிந்த அல்லது நம்புகிற அக்குற்றம், மரண தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருப்பின், ஏழு வருடங்கள் வரை நீடிக்கப்படக்கூடிய கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். ஆயுள் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருப்பின்:- மற்றும் அக்குற்றமானது, ஆயுள் சிறைத் தண்டனையுடன் அல்லது பத்து வருடங்கள் வரை நீடிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருப்பின், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். பத்து வருடங்களுக்குக் குறைவான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருப்பின்:- மற்றும் அக்குற்றமானது பத்து வருடங்களுக்கு நீடிக்கப்பட முடியாத ஏதாவதொரு கால அளவிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருப்பின், அக்குற்றத்திற்கென்று நிர்ணயிக்கப்பட்ட நீண்ட கால அளவு சிறைத்தண்டனையில் நான்கில் ஒரு பங்கு கால அளவு வரை நீட்டிக்கப்படக்கூடிய, அக்குற்றத்திற்கென வரையறுக்கப்பட்ட ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டு A என்பவர், z என்பவரை B என்பவர் கொலை செய்துவிட்டார் என்று தெரிந்திருந்தும், B ஐ தண்டனையிலிருந்து தப்ப வைக்க, z இன் சடலத்தை மறைக்க, B க்கு உதவுகிறார்.ஏதாவதொரு வகையிலான ஏழு வருடங்களுக்கான சிறைத்தண்டனைக்கும் மற்றும் அபராதத்திற்கும் A உள்ளாக வேண்டும். IPC-202\nஎவரேனும், ஒரு குற்றம் புரியப்பட்டிருக்கின்றது என்று தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்கு காரணமாயிருக்கும்போது, அக்குற்றம் பொருட்டான ஏதாவதொரு தகவலைத் தர சட்டப்படி கடமைப்பட்டிருக்கும்போது, உள்நோக்கத்துடன் தராதிருந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-203\nஎவரேனும், ஒரு குற்றம் புரியப்பட்டிருப்பதாகத் தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்குக் காரணமிருக்கும்போது, அக்குற்றத்தின் பொருட்டு பொய்யென அவருக்குத் தெரிந்த அல்லது நம்புகிற ஏதாவதொரு தகவலை அளித்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபாரதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். விளக்கம்:-சட்டப்பிரிவுகள் 201 மற்றும் 202 மற்றும் இச்சட்டப்பிரிவிலும், "குற்றம்" என்ற வார்த்தையானது, ஏதாவதொரு செயல் இந்தியாவிற்கு வெளியே எந்தவொரு இடத்தில் புரியப்பட்டிருந்தாலும், அது இந்தியாவிற்குள் புரியப்பட்டதாக கருதப்பட்டு சட்டப்பிரிவுகள் அதாவது, 302, 304, 382, 392, 393, 394, 395, 396, 397, 398, 399, 402, 435, 436, 449, 450, 457, 458, 459 மற்றும் 460 ஆகிய ஏதாவதொன்றின்கீழ் எப்படி தண்டிக்கப்படுமோ, அவ்வாறான செயலையும் உள்ளடக்குகிறது. IPC-204\nஎவரேனும், ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தில் அல்லது ஒரு பொதுப் பணியாளரிடம், அவர் பொதுப் பணியாளர் என்ற முறையில், அவரது முன்னிலையில் நடத்தப்படும் ஏதாவதொரு சட்டப்பூர்வமான செயல் நடவடிக்கையில், ஏதாவதொரு ஆவணத்தை அல்லது மின்னணுப் பதிவை சாட்சியாமாகத் தாக்கல் செய்ய சட்டப்படி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கும்போது, அவற்றை மறைத்தால் அல்லது அழித்தால் அல்லது மேற்கூறப்பட்டவாறு, சட்டப்படி அழைப்பாண்கள் மூலமாக அவற்றை முன்னிலைப்படுத்த அல்லது அதை அந்நோக்கத்திற்காக ஒப்படைக்க கோரப்பட்டிருக்கும்போது, அத்தகைய நீதிமன்றத்தில் அல்லது பொதுப்பணியாளர் முன்னிலையில் சாட்சியாக தாக்கல் செய்யப்படுவதை அல்லது பயன்படுத்தப்படுவதை தடுக்கும் உள்நோக்கத்தில் அத்தகைய ஆவணத்தை அல்லது மின்னணுப் பதிவை முழுவதையுமோ அல்லது ஒரு பகுதியையோ மாற்றம் செய்தால், அல்லது தெளிவாகப் படிக்க முடியாதபடி செய்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபாரதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-205\nஎவரேனும், மற்றொருவர் போல் பொய்யாக ஆள்மாறாட்டம் செய்து, மற்றும் அத்தகைய போலியான கதாபாத்திரத்தில் ஏதாவதொரு ஏற்றுக்கொள்ளுதலை அல்லது வாக்குமூலத்தை அளித்தால், அல்லது தீர்ப்புரையை ஏற்றுரைத்தால் அல்லது ஏதாவதொரு நீதிமன்ற ஆணையைப் பிறப்பிக்கச் செய்தால் அல்லது ஜாமீன்தாரராக அல்லது பிணையதாரராக ஆகினால் அல்லது ஏதாவதொரு பிற செயலை ஏதாவதொரு உரிமையியல் அல்லது குற்றவழக்குத் தொடர்வில் செய்தால், மூன்று வருடங்கள் வரை IPC-206\nஎவரேனும், தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு தண்டணைவிதிப்பின் காரணமாக, அல்லது ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தினால் அல்லது பிற தகுதி வாய்ந்த அதிகார அமைப்பினால் அத்தகைய தண்டனைவிதிப்பு வழங்கப்படலாமென்று தெரிந்தே, அல்லது ஒரு உரிமையியல் வழக்கில் ஒரு நீதிபரிபாலன நீதிமன்றம் வழங்கிய அல்லது வழங்கப்படலாமென்ற உரிமையியல் தீர்ப்பாணை அல்லது உத்தரவின்பேரில் அச்சொத்து அல்லது அதிலுள்ள ஆதாய உரிமை எடுக்கப்படலாமென்றிக்கும்போது, ஏதாவதொரு சொத்தை அதிலுள்ள ஆதாய உரிமையை ஒரு பறிமுதல் செய்யப்படுவதைத் தடுக்கும் உள்நோக்கத்தில், மோசடியாக அகற்றினால், மறைத்து வைத்தால், யாரேனும் ஒரு நபருக்கு உரிமை மாறுதல் செய்தால் அல்லது ஒப்படைப்பு செய்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-207\nஎவரேனும், ஏதாவதொரு சொத்தை அல்லது அதிலுள்ள ஏதாவதொரு ஆதாய உரிமையை, ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தால் அல்லது பிற தகுதி வாய்ந்த அதிகார அமைப்பினால் தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு தண்டணைவிதிப்பின் காரணமாக அல்லது அத்தகைய தண்டணைவிதிப்பு வழங்கப்படலாமென்று தெரிந்தே ஒரு பறிமுதல் செய்யப்பட்டு, அல்லது விதிக்கப்பட்ட ஒரு அபராதத்தை ஈடு செய்யும் வகையில் ஒரு கைப்பற்றப்பட்டு எடுக்கப்படுதலை அல்லது ஒரு உரிமையியல் வழக்கில் ஒரு நீதிபரிபாலன நீதிமன்றம் வழங்கிய அல்லது வழங்கப்படலாமென்ற ஒரு உரிமையியல் தீர்ப்பாணை அல்லது உத்தரவின்பேரில் அச்சொத்து அல்லது அதிலுள்ள ஆதாய உரிமை எடுக்கப்படலாமென்ற, உள்நோக்கத்துடன் தடுப்பதற்காக, அத்தகைய சொத்து அல்லது அதன்மீதான ஆதாய உரிமையின் மீது தனக்கு அதில் உரிமையில்லை அல்லது சரியான உரிமை கோர முடியாது எனத் தெரிந்தே, ஏதாவதொரு சொத்து அல்லது அதன்மீதான ஏதாவதொரு ஆதாய உரிமையை சூழ்ச்சி செய்து, மோசடியாக ஏற்றுக்கொண்டால், பெற்றால் அல்லது உரிமை கோரினால் இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-208\nஎவரேனும், யாரேனும் ஒரு நபரின் உரிமையியல் வழக்கில், அவருக்குத் தர வேண்டியதில்லாத ஒரு தொகைக்கு அல்லது அத்தகைய நபருக்குத் தர வேண்டிய தொகையை விட ஒரு கூடுதலான தொகைக்கு அல்லது அத்தகைய நபருக்கு உரிமையில்லாத ஒரு சொத்துக்கு அல்லது அச்சொத்தில் உள்ள ஆதாய உரிமைக்கு, ஒரு தீர்ப்பாணை அல்லது உத்தரவானது அவருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பின்னரும் அல்லது ஏதாவதொன்றின் பொருட்டு அது நிறைவேற்றப்பட்டிருக்கும்போது, அவருக்கு எதிராக மோசடியாக ஒரு தீர்ப்பாணை அல்லது உத்தரவு பிறப்பிக்கப்பட அல்லது பிறப்பிக்க செய்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டு A என்பவர், z என்பவருக்கெதிராக ஒரு உரிமையியல் வழக்கைத் தொடுக்கிறார்.தனக்கு எதிராக தீர்ப்பாணை ஒன்றை A பெறக்கூடும் என அறிந்த z, B என்பவரின் உரிமையியல் வழக்கில், அவருக்கு நியாயமாகத் தர வேண்டியதில்லாத ஓர் அதிகமான தொகைக்கு, தனக்கு எதிராக தீர்ப்புரை வழங்கப்பட மோசடியாக செயல்படுகிறார்.இது B தனக்காக அல்லது z இன் நன்மைக்காக, z இன் சொத்தின்மீது, A விற்கான தீர்பாணையின்கீழ் செய்யப்படும் விற்பனை தொகையில் பங்கு பெறுவதற்கும் செய்யப்பட்டதால், z, இச்சட்டப்பிரிவின்கீழ் குற்றம் புரிந்திருக்கிறார். IPC-209\nஎவரேனும் மோசடியாக அல்லது நேர்மையற்ற முறையில் அல்லது யாரேனும் ஒரு நபருக்குத் தீங்கு அல்லது தொல்லை கொடுக்கும் உள்நோக்கத்துடன், ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தில் பொய்யானதென அவருக்குத் தெரிந்த ஏதாவதொரு உரிமையைக் கோரினால் இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப் படவும் வேண்டும். IPC-210\nஎவரேனும், யாரேனும் ஒரு நபருக்கு எதிராக, தர வேண்டியதில்லாத ஒரு தொகைக்கு, அல்லது தரப்பட வேண்டிய தொகைக்கும் கூடுதலான ஒரு தொகைக்கு அல்லது அவருக்கு உரிமையேதும் இல்லாத ஏதாவதொரு சொத்துக்கு அல்லது அச்சொத்தின் மீதான ஆதாய உரிமைக்கு, மோசடியாக ஒரு தீர்ப்பாணை அல்லது உத்தரவைப் பெற்றால், அல்லது யாரேனும் ஒரு நபருக்கு எதிராக ஒரு தீர்ப்பாணை அல்லது உத்தரவு நிறைவேற்றப்பட்ட பின்னரும் அல்லது ஏதேனுமொன்றின் பொருட்டு அது நிறைவேற்றப்பட்டிருக்கும் போது, அத்தகைய நபருக்கு எதிராக தீர்ப்பாணை அல்லது உத்தரவு மோசடியாக ஏதாவதொரு அத்தகைய செயல் அவரின் பெயரில் நடைபெற அல்லது நடைபெற அனுமதித்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-211\nஒருவருக்குத் துன்பம் உண்டாக வேண்டும் என்ற கருத்துடன் அவர் மீது குற்றம் சாட்டி நடவடிக்கை எடுப்பதும், பிறரைத் தூண்டி அப்படி நடவடிக்கை எடுக்கச் செய்வதும் குற்றமாகும். சட்ட பூர்வமாகவும் நியாய பூர்வமாகவும், எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒருவர் மீது குற்றம் புரிந்ததாகப் பொய்யான குற்றச்சாட்டைத் தொடர்வதும் குற்றமாகும். இதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். அப்படி சுமத்தப்பட்ட குற்றம் மரண தண்டனை, ஆயுள் தண்டனை அல்லது ஏழு ஆண்டுகளும் அதற்கு மேலும் சிறைக்கவலைத் தண்டனையாகப் பெறத்தக்க குற்றச்சாட்டாக இருப்பின், பொய்க் குற்றம் சாட்டியவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். குற்றத்திற்கான பொய்யான குற்றசாட்டை தீங்கு விளைவிக்கும் உள்நோக்கத்துடன் செய்தல் எவரேனும், யாரேனும் ஒரு நபருக்கு தீங்கு விளைவிக்கும் உள்நோக்கத்துடன், அந்நபருக்கு எதிராக ஏதாவது குற்றச் செயல் நடவடிக்கைகளை தொடுத்தால், அல்லது தொடுக்கும்படி செய்தால், அல்லது யாரேனும் ஒரு நபர் ஒரு குற்றத்தைப் புரிந்திருக்கின்றார்.என்று அந்நபருக்கு எதிராக அத்தகைய செயல் நடவடிக்கை எடுக்க அல்லது குற்றஞ்சாட்ட நியாயமான மற்றும் சட்டப்படியான முகாந்திரம் இல்லையென்று தெரிந்தே பொய்யாக குற்றஞ்சாட்டினால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். மற்றும் ஒரு குற்றம் புரிந்ததாக ஒரு பொய்யான குற்றச்சாட்டில் தொடுக்கப்பட்ட அத்தகைய குற்றவியல் நடவடிக்கையானது, மரண தண்டனையுடன், ஆயுள் சிறைத் தண்டனையுடன் அல்லது ஏழு வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-212\nஎப்போதெல்லாம் ஒரு குற்றம் புரியப்பட்டிருக்கிறதோ, அப்போது எவரேனும் ஒரு நபரைக் குற்றம் புரிந்தவர் என அவருக்கு தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்கு காரணமிருக்கும்போது அவரைச் சட்டபூர்வமான தண்டனையிலிருந்து தப்பிக்க வைக்கும் உள்நோக்கத்துடன், புகலிடம் கொடுத்தால் அல்லது மறைத்து வைத்தால்; மரண தண்டனையால் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாயிருந்தால்:- அக்குற்றம் மரண தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால், ஐந்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். ஆயுள் சிறைத்தண்டனையுடன், அல்லது சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால்:- மற்றும் அக்குற்றம் ஆயுள் சிறைத் தண்டனையுடன் அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால் மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். இச்சட்டப்பிரிவின்படி, "குற்றம்"என்பது, ஏதாவதொரு செயல், இந்தியாவிற்கு வெளியே ஏதாவதொரு இடத்தில் புரியப்பட்டு அது பின்வருகின்ற சட்டப்பிரிவுகளில் ஏதாவதொன்றின்கீழ் அதாவது, 302, 304, 382, 392, 393, 394, 395, 396, 397, 398, 399, 402, 435, 436, 449, 450, 457, 458, 459 மற்றும் 460 ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்படக்கூடியதாக இருப்பதை உள்ளடக்குகிறது மற்றும் இச்சட்டப்பிரிவின் நோக்கத்திற்காக அத்தகைய ஒவ்வொரு செயலும், அக்குற்றஞ்சாட்டப்பட்ட நபர் இந்தியாவில் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு நிகராக கொள்ளப்பட வேண்டும். விலக்கு:-ஏதாவதொரு வழக்கில் புகலிடம் அளித்தல் அல்லது மறைத்து வைத்தல் குற்றவாளியின் கணவன் அல்லது மனைவியால் இருக்கும்போது, அதற்கு இந்த ஷரத்து நீட்டிக்காது. எடுத்துக்காட்டு A என்பவர், B என்பவர் கூட்டுக்கொள்ளை புரிந்திருக்கின்றார் என அறிந்தும், அவரை சட்டப்பூர்வ தண்டனையிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டுமென்று B ஐ தெரிந்தே மறைத்து வைக்கிறார்.இங்கு B ஆயுள் சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப் பட வேண்டுமாதலால், A மூன்று வருடங்களுக்கு மிகாது ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-213\nஎவரேனும், அவர் ஒரு குற்றத்தை மறைப்பதற்காக அல்லது ஏதாவதொரு குற்றத்திற்கான சட்டப்பூர்வ தண்டனையிலிருந்து யாரேனும் ஒரு நபரை அவர் தப்புவிப்பதற்காக அல்லது யாரேனும் ஒரு நபரை சட்டப்பூர்வ தண்டனைக்குள்ளாக்கும் பொருட்டு அவருக்கெதிராக எவ்வித செயல் நடவடிக்கையும் அவர் எடுக்காமலிருப்பதற்குப் பலனாக, ஏதாவதொரு கையூட்டை அவருக்காகவோ அல்லது யாரேனும் ஒரு பிற நபருக்காகவோ ஏற்றுக்கொண்டால், அல்லது பெறுவதற்கு முயன்றால் அல்லது ஏற்றுக்கொள்ள ஒத்துக் கொண்டால், அல்லது அவருக்காகவோ அல்லது யாரேனும் ஒரு பிற நபருக்காகவோ ஏதாவது சொத்தை திரும்பப் பெற்றாலோ, ஒரு மரண தண்டனையாக இருந்தால்:- அக்குற்றம் மரண தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். ஆயுள் சிறைத் தண்டனையுடன் அல்லது சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால்:- மற்றும் அக்குற்றம் ஆயுள் சிறைத்தண்டனையுடன் அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். மற்றும் அக்குற்றம் பத்து வருடங்களுக்கு மிகாத சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால், அக்குற்றத்திற்க்கென்று வகை செய்யப்பட்டுள்ள நீண்ட கால சிறைத் தண்டனையின் நான்கில் ஒரு பங்கு என்ற ஒரு கால அளவிலான அக்குற்றத்திற்கென்று வரையறுக்கப்பட்டுள்ள வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-214\nஎவரேனும், யாரேனும் ஒரு நபருக்கு ஒரு குற்றத்திலிருந்து அந்நபரை மறைப்பதற்கு அல்லது ஏதாவதொரு குற்றத்திற்கான சட்டபூர்வதண்டனையிலிருந்து யாரேனும் ஒரு நபரை அவர் தப்பிக்க வைப்பதற்காக, அல்லது சட்டபூர்வத் தண்டனைக்கு உள்ளாக்கும் நோக்கத்திற்காக யாரேனும் ஒரு நபருக்கு எதிராக செயல் நடவடிக்கை எதுவும் அவர் எடுக்காமலிருப்பதற்குப் பலனாக, ஏதாவதொரு கையூட்டைக் கொடுத்தால் அல்லது கொடுக்கப்பட செய்தால், அல்லது கொடுக்க ஒத்துக்கொண்டால் அல்லது கொடுக்க உடன்பட்டால் அல்லது உடன்படச் செய்தால், அல்லது ஏதாவதொரு சொத்தை யாரேனும் ஒரு நபருக்கு திரும்பக் கிடைக்கச் செய்தால் அல்லது திரும்ப கிடைக்கும்படி செய்யப்படச் செய்தால். ஒரு மரண தண்டனையாக இருந்தால்:- அக்குற்றம் மரண தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். ஆயுள் சிறைத் தண்டனையுடன் அல்லது சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால்:- மற்றும் அக்குற்றம் ஆயுள் சிறைத்தண்டனையுடன் அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். மற்றும் அக்குற்றம் பத்து வருடங்களுக்கு மிகாத சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால், அக்குற்றத்திற்க்கென்று வகை செய்யப்பட்டுள்ள நீண்ட கால சிறைத் தண்டனையின் நான்கில் ஒரு பங்கு என்ற ஒரு கால அளவிலான அக்குற்றத்திற்கென்று வரையறுக்கப்பட்டுள்ள வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். விலக்கு:-சட்டப்படி ஒத்திசைவாக தீர்த்துக் கொள்ளக்கூடிய குற்றத்திற்கான ஏதாவதொரு வழக்குக்கு, சட்டப் பிரிவுகள் 213 மற்றும் 214 இன் ஷரத்துகள் நீளாது IPC-215\nஎவரேனும், இச்சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படக்கூடிய ஏதாவதொரு குற்றத்தினால் இழந்துவிட்ட ஏதாவதொரு அசையும் சொத்தை மீட்பதற்கு, யாரேனும் ஒரு நபருக்கு உதவி செய்வதாக பாவனை செய்து அல்லது உதவி செய்யும் நோக்கில் ஏதாவதொரு கையூட்டைப் பெற்றால் அல்லது ஒத்துக் கொண்டால் அல்லது பெறுவதற்கு சம்மதம் அளித்தால், குற்றம் புரிந்தவர் கைது செய்யப்பட மற்றும் அக்குற்றத்திற்கு தண்டிக்கப்பட அவரிடமுள்ள சக்தியின் கீழுள்ள அனைத்து வழிமுறைகளையும் அவர் பயன்படுத்தினால் தவிர, இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன்.அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-216\nஎவரேனும், யாரேனும் ஒரு நபர் ஒரு குற்றத்திற்குத் தண்டிக்கப்பட்டு அல்லது குறைஞ்சாட்டப்பட்டு அக்குற்றத்திற்க்காக சட்டபூர்வ காவலில் இருக்கும் போது அத்தகைய காவலிலிருந்து தப்பிவிட்டால்; அல்லது எப்போதெல்லாம் ஒரு பொதுப் பணியாளர் என்ற முறையிலான தனது சட்டபூர்வ அதிகாரங்களை பயன்படுத்துகிறாரோ அப்போது ஒரு குற்றத்திற்காக ஒரு குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட உத்தரவிடும்போது, அத்தகைய தப்பிவிட்டதை அல்லது கைது செய்யப்பட வேண்டிய உத்தரவைத் தெரிந்த எவரேனும், அந்நபர் கைது செய்யப்படுவதிலிருந்த தடுக்கும் உள்நோக்கத்துடன், அவருக்கு புகலிடம் கொடுத்தால் அல்லது மறைத்து வைத்தால் பின்வருமாறான வகையில் கூறப்பட்டபடி தண்டிக்கப்பட வேண்டும், அதாவது:- ஒரு மரணதண்டனையாக இருந்தால்:- அந்நபரை காவலில் வைத்திருந்ததற்கான அல்லது கைது செய்யப்பட்ட உத்தரவிடப்பட்ட அக்குற்றம், மரண தண்டணையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன்.அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். ஆயுள் சிறைத் தண்டனையுடன் அல்லது சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால்:- அக்குற்றம் ஆயுள் சிறைத்தண்டனையுடன் அல்லது பத்து வருடங்களுக்கான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால், அவர் மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் மற்றும் அபராதத்துடன் அல்லது அபராதமில்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்; மற்றும் அக்குற்றம் ஒரு வருடத்திற்கு மேல் நீட்டிக்கப்பட்ட ஒரு கால அளவிலான ஆனால் பத்து வருடங்கள் இல்லாத சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால், அவர் அத்தகைய குற்றத்திற்கென்று வகை செய்யப்பட்டுள்ள நீண்ட காலச் சிறைத்தண்டனையின் நான்கில் ஒரு பங்கு என்ற ஒரு கால அளவிலான அக்குற்றத்திற்கென்று வரையறுக்கப்பட்டுள்ள வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். இச்சட்டப்பிரிவில் "குற்றம்" என்பது, ஏதாவதொரு செயல் அல்லது செய்வனச் செய்யாமை இந்தியாவில் புரியப்பட்டால் எவ்வாறு தண்டனைக்குள்ளாகும் ஒரு குற்றமாக ஆகுமோ, அதேபோல், அது இந்தியாவிற்கு வெளியில் புரியப்பட்டாலும் குற்றவாளியாவதையும் உள்ளடக்குகிறது மற்றும் அதற்காக அயல்நாட்டில் ஒப்படைத்தல் சம்பந்தப்பட்ட சட்டப்படியோ அல்லது பிற வகையிலோ இந்தியாவில் கைதுக்கு உள்ளாதல் அல்லது காவலில் வைக்கப்படுவதையும் உள்ளடக்குகிறது.மற்றும் இச்சட்டப்பிரிவின் நோக்கங்களுக்காக ஒவ்வொரு அத்தகைய செயலும் அல்லது செய்வனச் செய்யாமையும், அத்தகையவற்றிற்காக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் இந்தியாவில் அதற்காக குற்றவாளி என்பதுபோலவே தண்டிக்கப்படவேண்டும் என்பதற்கு நிகராகக் கொள்ளப்பட வேண்டும். விலக்கு:-கைது செய்யப்பட்ட நபருக்கான புகலிடம் அல்லது மறைத்து வைத்தல், எந்நேர்வில் அந்நபரின் கணவன் அல்லது மனைவியால் உள்ளதோ, அந்நேர்வில் இந்த ஷரத்து நீட்டிக்காது. IPC-217\nஎவரேனும், சட்டப்படியான தண்டனையிலிருந்து யாரேனும் ஒரு நபரை உள்நோக்கத்துடன் காப்பாற்ற அல்லது அதனால் அவர் அநேகமாக காப்பாற்றப்படக் கூடும் என தெரிந்தே, அல்லது அடைய வேண்டிய தண்டனையிலிருந்து ஒரு குறைந்த தண்டனையைப் பெறுவதற்காக அல்லது உள்நோக்கத்துடன் ஏதாவதொரு சொத்தை பறிமுதலிலிருந்தோ அல்லது சட்டப் படியான பொறுப்பிற்கு உள்ளாக்குவதிலிருந்தோ காப்பாற்றும் அல்லது அவர் அதனால் அதை அநேகமாக காப்பாற்றக்கூடும் என தெரிந்தே, ஒரு பொதுப் பணியாளராயிருக்கின்றவர் அத்தகைய பொதுப் பணியாளர் என்ற முறையில் இப்படித்தான் நடக்க வேண்டுமென்று இருக்கின்ற சட்டப்படியான ஏதாவதொரு கட்டளைக்கு தெரிந்தே கீழ்ப்படியாமலிருந்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன்.அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-218\nபொதுப் பணியாளராக இருக்கின்ற எவரேனும், அத்தகைய பொதுப் பணியாளர் என்ற முறையில், ஏதாவதொரு பதிவேட்டை அல்லது பிற எழுத்துருவைத் தயாரிக்க பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளபோது, பொதுமக்களுக்கோ அல்லது யாரேனும் ஒரு நபருக்கோ இழப்பு அல்லது தீங்கு விளைவிக்க, அல்லது அதன்மூலம் அநேகமாக விளைவிக்கலாமென்று தெரிந்தே உள்நோக்கத்துடன், அல்லது அதன்மூலம் சட்டப்படியான தண்டனையிலிருந்து ஒரு நபரை காப்பாற்ற அல்லது அநேகமாக காப்பாற்றப்படலாமென்று தெரிந்தே உள்நோக்கத்துடன், அல்லது ஏதாவதொரு சொத்தை பறிமுதல் செய்யப்படுவதிலிருந்து அல்லது அச்சொத்தை சட்டப்படியான பொறுப்பிற்கு உள்ளாக்குவதிலிருந்து உள்நோக்கத்துடன் காப்பாற்ற அல்லது அதனால் அவர் அநேகமாக காப்பாற்றலாமென்று தெரிந்தே, அப்பதிவேட்டை அல்லது எழுத்துருவை, அவருக்குத் தெரிந்தவரை அவைகள் தவறானது என்ற முறையில் ஏற்படுத்தினால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன்.அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-219\nபொதுப் பணியாளராக இருக்கின்ற எவரேனும், ஒரு நீதிமன்றச் செயல் நடவடிக்கையின் எந்தஒரு நிலையிலும், ஏதாவதொரு அறிக்கையை, உத்தரவை, தீர்ப்பை அல்லது தீர்மான முடிவை, அவைகள் சட்டத்திற்குப் புறம்பானதென்று அவருக்குத் தெரிந்தும், அவற்றை நேர்மையற்ற முறையில் அல்லது தீய நோக்கத்தில் தாக்கல் செய்தால் அல்லது தீர்மானமாகக் கூறினால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன்.அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-220\nஎவரேனும், நபர்களை விசாரணைக்கு பணிந்து மேல் அனுப்ப அல்லது சிறைக்கு அனுப்ப அல்லது நபர்களை சிறையில் வைக்க, சட்டப்படியான அதிகாரத்தை வழங்கும் ஏதாவதொரு பதவியில் இருக்கின்றவர்அவ்வதிகாரத்தைப் பயன்படுத்தும்போது, அவ்வாறு செய்வதன்மூலம் அவர் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகிறார் என தெரிந்தே, யாரேனும் ஒரு நபரை நேர்மையற்ற முறையில் அல்லது தீய உள்நோக்கத்தில் பணிந்து மேல் விசாரணைக்கு அல்லது சிறைக்கு அனுப்பினால், அல்லது யாரேனும் ஒரு நபரை சிறையில் வைத்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

Popular posts from this blog

Privacy Policy

Tamil BNS Privacy Policy

இரண்டு முட்டாள் ஆடுகள்